Tuesday, August 30, 2011

நோன்புப் பெருநாள் தினத்தில் ரமழான் கற்றுத் தந்த போதனைகளை நினைப்போம்


புண்ணியம் பொழிந்த மாதம் எம்மை விட்டு பிரிந்து விட்டது. கண்ணியமிகு மாதம் எம்மை விட்டு அகன்று விட்டது.
ஆம்! இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை ஒரு மாத காலம் நோற்று விட்டு ஷவ்வால் மாத தலைப்பிறையைக் கண்டு இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.

Monday, August 1, 2011

​( நோன்பு தொடர்பாக நான் எழுதிய இக் கட்டுரை 1-8-2011 வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது. )
புனித ரமழான் நோன்பை நோற்று இறை திருப்தியை பெறுவோம்
"நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் "தக்வா' (இறையச்சம்) உள்ளவர்களாகலாம்'' (சூரத்துல் பக்கரா)

ஆம்! உலக முஸ்லிம்களின் வாழ்வில் மீண்டும் ஒரு முறை புனித ரமழான் வந்திருக்கிறது. அமல்கள் கோடி புரிய அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆம், எமது வாழ்வில் மீண்டும் ஒரு முறை ஆன்மிக வசந்தம் வீச ரமழான் மாதம் பிறந்திருக்கிறது.

Thursday, February 17, 2011

நபிபெருமானார் ஜனன தினத்தையிட்டு 16-2-2011 அன்று வீரகேசரி பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரை

Tuesday, November 16, 2010

17-11-2010 ஹஜ் பெருநாள் அன்று எனது இக் கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமானது.




Saturday, November 7, 2009

மாணவர்களின் பூரண சுகாதாரத்தில் விளையாட்டின் முக்கியத்துவம்



பாடசாலை மாணவர்கள் தமது உடல் ஆரோக்கியம் தொடர்பான விடயத்தில் அதிக அக்கறை செலுத்தாதவர்களாகவே இருக்கிறார்கள். நவநாகரிகப் பாணியையும் , நவீன மாற்றத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் விடயத்திலும் காட்டும் அக்கறையில் பாதியளவு கூட தமது உடல் ஆரோக்கியம் தொடர்பில் காட்டுவதில்லை.

அத்துடன், உள . சமூக ஆரோக்கியம் குறைந்தவர்களாகவும்
மாணவர்கள் பலர் காணப்படுகிறார்கள். மாணவர்கள் மத்தியில் நீரிழிவு நோய் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவலும் வெளியாகியுள்ளது.