Sunday, July 28, 2013

புனித ரமழானில் மறைந்திருக்கும் தீர்ப்புக்குரிய 'லைலத்துல் கத்ர்' இரவு

புனித ரமழானின் மூன்றாவது பகுதி இன்னும் இரண்டு தினங்களில் (செவ்வாய்க்கிழமை) ஆரமபமாகிறது. ரமழானில் மறைந்திருக்கும் தீர்ப்புக்குரிய 'லைலத்துல் கத்ர்' இரவு மூன்றாவது பகுதியில் மறைந்திருக்கிறது.

ரமழானின் கடைசிப் பத்து தினங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தினங்களாகும். இத்தினங்களில் ஒற்றைப்பட இரவுகள் ஒன்றில் 'லைலத்துல் கத்ர்' இரவு மறைத்து

Friday, May 24, 2013

' பிரைவேட் பஸ்" (சிறுகதை)


     
    கலாநெஞ்சன் ஷாஜஹான்

'பஞ்சிகாவத்த...மருதான.... டவுன் ஹோல் .... பம்பலப்பிட்டிய...நகின்ட... நகின்ட...'
நோன்ஸ்டப்' ஆக ஒலிக்கும் அந்;த தனியார் பஸ் நடத்துனனின் குரல் ஆமர் வீதியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

நான் அவசரமாக ஓடிச் சென்று பஸ்ஸினுள் ஏற முயன்று, பாதி வெற்றியும் மீதி தோல்வியுமாய் சுவரில் எறியப்பட்ட பந்தாக மீண்டும் வெளியே வந்து விழப்போய் ஒருவாறு என்னை பஸ்ஸினுள் நுழைத்துக்கொள்கிறேன்.

Wednesday, March 20, 2013

முஸ்லிம் பெண்களின் 'அபாயாவும்' பேரினவாதிகளின் எச்சரிக்கை மணியும்


 -    கலாநெஞ்சன் ஷாஜஹான்  B.Ed        

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டு வரும் தொடர்ச்சி;யான விடயங்கள் முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்து வரும் நிலையில் முஸ்லிம் பெண்களின் அபாயா தொடர்பில் அடுத்த எச்சரிக்கை மணிகள்  தொடர்ச்சியாக  அடிக்கப்பட்டு வருகின்றன.

Friday, March 15, 2013

எயிட்ஸ் நோயும் அறிந்திருக்க வேண்டிய சில விடயங்களும்



-   கலாநெஞ்சன் ஷாஜஹான்  B.Ed
  

எயிட்ஸ் (AIDS) என்ற சொல்லை கேட்டாலேயே எல்லோருக்கும் அச்சம்
ஏற்படும். இந்நோய் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் பயங்கர ஆட்கொல்லி நோயாகும்.

உலகின் பல நாடுகளிலும் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுக்கு ஆளான பல இலட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். உலகில் தினமும் பல ஆயிரக்கணக்கானோர எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுக்கு ஆளாகிறார்கள்.

'சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயங்களும்'



- கலாநெஞ்சன் ஷாஜஹான் 
  
இலங்கையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் நாளுக்கு நாள்  அதிகரித்து வரும் அதிர்ச்சி  தகவல்கள்  வெளிவந்து  கொண்டே  இருக்கின்றன.

சிறுவர்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படல், வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட  பின்னர்  கொலை செய்யப்படல், அச்சுறுத்தப்படல் மற்றும்  சிறுவர் உரிமைகள் பல்வேறு  வகைகளிலும்  மீறப்படல் என்று  கவலை தரும் விடயங்கள் தொடர்கதையாக  வெளிவந்து கொண்டிருக்கின்றன.

Friday, September 7, 2012

நீரிழிவு நோயும் பாதங்களின் பராமரிப்பும்


நீரிழிவு நோய் மக்களை ஆட்டிப் படைக்கும் நோயாகும். இலங்கையில் நான்குபேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில்,நீரிழிவு நோய் காரணமாக வருடாந்தம் 700 க்கும் அதிகமானவர்களின் கால்கள் அகற்றப்படுவதாக தேசிய நீரிழிவு

Friday, August 17, 2012

நீர்கொழும்பு களப்பும் அதற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பும்

வந்தாரை வாழவைக்கும் சிங்கார நீர்கொழும்பு என்று போற்றப்படும்  நீர்கொழும்பு நகருக்கு பேரழகு சேர்க்கும் பெருமை பெற்றது நிர்கொழும்பு களப்பாகும். அது இயற்கையின் கொடையாகும்.

மேல்மாகாணத்தில் உள்ள ஒரே ஒரு களப்பாகவும், இலங்கையின் மிகப்பெரிய களப்பாகவும் கருதப்படும் இந்த களப்பு நாளுக்கு நாள் மாசடைந்து வருவதாகவும்,களப்பு இடங்கள் சட்டவிரோதமான

Sunday, July 1, 2012

தொற்றல் அல்லாத நோய்கள் தொடர்பில் கவனம் செலுத்துவோம்


      - கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed

ஆரோக்கியம் ஒரு சிறந்த செல்வமாகும். எத்தனை கோடி பணம் இருந்தாலும் நோய் நொடிகளுடன் வாழ்ந்தால் எம்மிடமுள்ள செல்வத்தை கூட சரியாக அனுபவிக்க முடியாமல் போய் விடலாம்.


நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள எத்தனையோ வசதி படைத்தவர்கள் தமது விருப்பம்   போல் உணவு வகைகளை

Wednesday, June 13, 2012

'இல்லற வாழ்வின் பிரச்சினைகளும் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும் தீர்வுகளும்'

- கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed

திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். இரு மனங்கள் கலந்தால் திருமணம் என்பார்கள். திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். 
ஒருவருடைய  வாழ்வில் மிக இனிமையானதும்மங்களகரமானதும், மறக்க முடியாததுமான விடயம்தான் திருமணம்.

Thursday, May 31, 2012

பாலியல் ஆற்றலை அதிகரிக்க மருந்து வகைகளை தவிர்த்து இயற்கை உணவுகளை பயன்படுத்துவோம்


 -          
   - கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed


பாலியல் என்பது உயிரினங்களுக்கு இறைவன் கொடுத்த வரம் இனப் பெருக்கத்தின் ஆதாரம். பாலியல் என்பது அருவருக்கத்தக்க விடயமோ வேண்டத்தகாத விடயமோ அல்ல. பாலியல் என்பது ஆபாச விடயமும் அல்ல.

Saturday, December 24, 2011

பட்டாசு தயாரிப்பும் கிம்புலாபிட்டிய கிராமமும்


    - கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed  


  நத்தார் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மக்கள் தயாராகி வருகின்றனர்.

புத்தாண்டு என்றாலே பட்டாசு வகைள் எமது ஞாபகத்திற்கு வரும்.தமிழ் சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டத்தைப் போன்று நத்தார் மற்றும் ஜனவரி புத்தாண்டு கொண்டாட்டங்;களின் போதும் பட்டாசுகளுக்கு தனியிடம் உண்டு.

Saturday, December 10, 2011

ஞாபக மறதியும் நினைவாற்றலும்

-          கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed 


இன்றைய அவசர யுகத்தில் ஞாபக மறதி என்பது பெரும் பிரச்சினையாகவே உள்ளது. சிலருக்கு ஞாபக மறதி அதிகமாக இருக்கும். இன்னும் சிலருக்கு ஓரளவு ஞாபக மறதி இருக்கும்.

ஞாபக மறதியை நோய் என்றும் சிலர் கூறுவர். அது போல் நினைவாற்றலை ஒரு கலை என்றும் கூறுவர்.

ஞாபக மறதி காரணமாக இழப்புக்களும் பின்னடைவுகளும், அசௌகரியங்களும், எதிர் மறையான விடயங்களும் ஏற்படும் சந்தர்ப்பங்கள் உண்டு. இருந்த போதிலும் ஞாபக மறதி காரணமாகவே