Monday, June 25, 2018

ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கௌரவித்த கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் (PEARLS OF HAMEEDIA) பழைய மாணவர்கள் (PHOTOS)


கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியில் 1982 ஆம் ஆண்டில் கல்வி கற்ற  பழைய மாணவர் குழுவினர் (PEARLS OF HAMEEDIA)  தமக்கு கல்வி கற்பித்த அதிபர் மற்றும் ஆசிரியர்களையும் பாடசாலைக்கு பல்வேறு வகையிலும் உதவி புரியும் பழைய மாணவர்களையும் விருது வழங்கி கௌரவித்தனர்.
 23-6-2018 சனிக்கிழமை அன்று நீர்கொழும்பு ரிச்வின் விளா (Richvin Villa)   இல்லத்தில் இடம்பெற்ற PEARLS OF HAMEEDIA பழைய மாணவர் குழுவின் ஒன்றுகூடல் மற்றும் இரவு விருந்து  நிகழ்வில் ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில்  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் விசேட அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

Thursday, June 14, 2018

ஆன்மீக இன்பத்தை தந்த புனித ரமழான்


(வீரகேசரி பத்திரிகையில் நோன்புப் பெருநாள்  சிறப்பிதழில் 15-6-2018 அன்று பிரசுரமான கட்டுரை)

- எம். இஸட். ஷாஜஹான் 

ஒரு மாத காலம் ஆத்மீக இன்பத்தை தந்து அருள் மழை பொழிந்த புனித ரமழான் மாதம் நேற்றோடு எமை விட்டு பிரிந்து விட்டது. இன்று நாங்கள் புனித நோன்புப் பெருநாளை பெரு உவகையோடு கொண்டாடுகிறோம்.
இறைவனின் நேசத்தை பெறுவதற்காக தடுக்கப்பட்ட சகல காரியங்களிலிருந்தும் தவிர்ந்து நடந்து, நல்லமல்கள் பல புரிந்து, முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தம்மையே புடம்போட்டுக் கொண்டு இன்று இந்த மகத்துவம் மிக்க பெருநாளை கொண்டாடுகின்றோம்.
இறை பள்ளிவாசல்களில் 'தக்பீர்' முழக்கம் ஓங்கி ஒலிக்கிறது. இறையடியார்களின் உள்ளத்தில் உவகை பெருக்கெடுத்தோடுகிறது. அனைவரும் அதிகாலையில் எழுந்திருந்து, குளித்து புத்தாடையணிந்து,

அருள்மிகு புனித ரமழான் மாதம் உதித்துவிட்டது



 (புனித ரமழான் நோன்பு ஆரம்ப தினம் அன்று 17-5-2018 பிரசுரமான கட்டுரை)

எம். இஸட். ஷாஜஹான் 

'நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் 'தக்வா' (இறையச்சம்) உள்ளவர்களாகலாம்

                       (சூரத்துல் பக்கரா)

ஆம்! முஸ்லிம்கள் ஆவலோடு எதிர்ப்பார்திருந்த புனித ரமழான் மாதம் மீண்டும் ஒருமுறை எமை நாடி வந்திருக்கிறது. பாவக்கறைகளை அகற்றும் மாதம் பிறந்திருக்கிறது. புண்ணியம், பொழியும் கண்ணியமிகு இனிய ரமழான் மலர்ந்திருக்கிறது. நன்மைகள்; கோடி புரிய அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எமது வாழ்வில் மீண்டும் ஒரு முறை ஆன்மிக வசந்தம் வீச இனிய ரமழான் மாதம் பிறந்திருக்கிறது.

Wednesday, December 14, 2016

ரமழானின் போதனைகளை தொடர்ந்து பேணுவோம்

(06-07-2016 அன்று   இக்கட்டுரை வீரகேசரியில் பிரசுரமானது.)

புண்ணியம் பொழிந்த மாதம் எம்மை விட்டு பிரிந்து விட்டது. கண்ணியமிகு மாதம் எம்மைவிட்டு அகன்று விட்டது. புனித ரமாழான் மாதத்திற்கு விடை கொடுத்துவிட்டு அல்லாஹ் தஆலாவின் அருளினால் இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்.
ஆம்! இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை ஒரு மாத காலம் நோற்று விட்டு 'ஷவ்வால்' மாத தலைப்பிறையைக் கண்டு இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.
முஸ்லிம்கள் கொண்டாடும் இரு பிரதான பெருநாட்களில் முதல் பெருநாள் நோன்புப் பெருநாளாகும். 'ஈதுல் பித்ர்' எனும்  இந்தப் புனிதப் பெருநாள் சமத்தவத்தை, சகோதரத்துவத்தை, சாந்தியை, சமாதானத்தை ஏற்படுத்தும் உன்னத பெருநாளாக விளங்குகிறது. இறைவனின் நேசத்தை

உலகம் போற்றும் சமாதானத் தூதர் முஹம்மத் நபி

(12-12-2016 அன்று   இக்கட்டுரை வீரகேசரியில் பிரசுரமானது.)


உலகம் போற்றிப் புகழும் உத்தமத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் ஜனன தினத்தை உலகம் பூராவும் உள்ள முஸ்லிம்கள் இன்று (12-12-2016) கொண்டாடுகின்றனர்.
நபியவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு மட்டும் தூதராக அனுப்பப்படவில்லை. உலகில் பிறக்கின்ற சகல மக்களுக்கும் நேர் வழிக்காட்டக் கூடிய தூதராக ஏக இறைவனால் அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.
ரஸ்ய தத்துவ மேதை டால்ஸ்டாய் என்பவர் மனிதனை  எடைபோடும் அளவுகோல் ஒன்றிருப்பின் அது முஹம்மது  (ஸல்) அவர்களாகத்தான் இருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது
(நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர் (அல்குர்ஆன் 68:4)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரிபூரண மனிதராக உலகில் வாழ்ந்து காட்டினார்கள். அவர்களது சொல், செயல்கள் யாவும் மனித வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாகும்.

Wednesday, December 23, 2015

மனித குலத்தை சீர்த்திருத்திய மாநபி - எம்.இஸட்.ஷாஜஹான்

உலகிற்கு அருட்கொடையாக உதித்த உலகம் போற்றும் உத்தமத் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது ஜனன தினம் இன்றாகும்.
 முஹம்மத் நபியவர்கள் மனித குலத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவராவார். அவர்களின் வருகையே மனித குல மீட்சிககு அடித்தாளமிட்டது.
அண்ணல் நபியவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு மட்டும் தூதராக அனுப்பப்படவில்லை. உலகில் பிறக்கின்ற சகல மக்களுக்கும் நேர் வழிக்காட்டக் கூடிய தூதராக ஏக இறைவனால் அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.மனிதப் பண்பாட்டையே உயர்த்திக் காட்டிய உத்தமர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்பதை  சரித்திரம் புகழ்ந்து கூறிக் கொண்டிருக்கிறது.
ரஸ்ய தத்துவ மேதை டால்ஸ்டாய் என்பவர் மனிதனை  எடைபோடும் அளவுகோல் ஒன்றிருப்பின் அது முஹம்மது  (ஸல்) அவர்களாகத்தான் இருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Saturday, July 18, 2015

பாவங்களை அகற்றும் புனித ரமழான்


(18-6-2015 அன்றைய வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமான எனது கட்டுரை.)

'நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் 'தக்வா' (இறையச்சம்) உள்ளவர்களாகலாம்
                       (சூரத்துல் பக்கரா)
ஆம்! புனித ரமழான் மாதம் மீண்டும் ஒருமுறை எமை நாடி வந்திருக்கிறது. பாவக்கறை அகற்றும் மாதம் பிறந்திருக்கிறது. புண்ணியம், பொழியும் கண்ணியமிகு இனிய ரமழான் மலர்ந்திருக்கிறது. அமல்கள் கோடி புரிய அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எமது வாழ்வில் மீண்டும் ஒரு முறை ஆன்மிக வசந்தம் வீச உலக வாழ் முஸ்லிம்களுக்கு இனிய ரமழான் மாதம் பிறந்திருக்கிறது.
இறை திருப்தியே மனித வாழ்க்கையின் ஒரே இலக்காகும். அந்த இறை திருப்தியும் பொருத்தமும் தூய்மையான உள்ளத்துடன் வரும் மனிதர்களுக்குத்தான் கிடைக்கும். ஏக இறைவனிடம் கிடைக்கும் அந்த உளத் தூய்மையை எம்மிடத்தில் ஏற்படுத்தவே சங்கைமிகு மாதம் உதித்திருக்கிறது.

மனிதனைப் புடம் போட்ட ரமழான் மாத நோன்பின் இனிய பெருநாள்

(18-7-2015 அன்றைய வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமான எனது கட்டுரை.)

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை ஓரு மாதம் முழுதும் நோற்றுவிட்டு இன்று நாங்கள்  இனிய நோன்புப் பெருநாளை பெருமகிழ்வுடன் கொண்டாடுகிறோம்.
புண்ணியம் பொழிந்த கண்ணியமிகு மாதத்திற்கு விடை கொடுத்து விட்டு  இனிய ஈதுல்; பித்ர் பெருநாளை கொண்டாடுகிறோம். ஆம்! 'ஷவ்வால்' மாத தலைப்பிறையைக் கண்டுவிட்டு இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.
இறைவனின் நேசத்தை பெறுவதற்காக தடுக்கப்பட்ட சகல காரியங்களிலிருந்தும் தவிர்ந்து நடந்து, நல்லமல்கள் பல புரிந்து, முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தம்மையே புடம்போட்டுக் கொண்டு இன்று இந்த மகத்துவம் மிக்க பெருநாளை கொண்டாடுகின்றோம்.

Thursday, September 11, 2014

அதிர்ச்சி வைத்தியம் அரசுக்கா? முஸ்லிம் காங்கிரஸிற்கா? - தேச நேசன்

 (தமிழ்த் தந்தி பத்திரிகை 7-9-2014)
ஊவா தேர்தலில் அரசாங்கத்துக்கு நாம் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும். அரசாங்கம் முஸ்லிம்களை கண்டுகொள்ளவில்லை என்பதை அரசு சார்பில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரையேனும் களமிறக்கப்படாததை வெளிக்காட்டியுள்ளது. இதனை மறைக்கவே தற்போது எமது கூட்டமைப்பு அவர்களின் கடிவாளம் கைக்கூலிகள் என கூறி வருகின்றனர். இவையெல்லாம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. ஊவா முஸ்லிம்கள் நன்றாக சிந்தித்து செயல்பட வேண்டும் அரசாங்கம் சார்பில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளர்களும் களமிறக்கப்படாமையானது ஊவா வாழ் முஸ்லிம்களை புறந்தள்ளியிருப்பதை தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. எனவே நடைபெறவுள்ள ஊவா மாகாண சபை தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என்று  பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

வாக்கு வேட்டைக்காக கூட்டு சேர்ந்திருக்கும் முஸ்லிம் கட்சிகள் - தேச நேசன்

(தமிழ்த் தந்தி பத்திரிகை 31-8-2014)

தமிழ் திரைப்படமொன்றில் நகைச்சுவை நடிகர் ஒருவர் 'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' என்று கிண்டலாகக் குறிப்பிடுவார். அதேபோன்று 'அரசியல்  என்பது ஒரு சாக்கடை. அதில் எதுவேண்டுமானாலும் கலக்கலாம்.' இது புpரபல அரசியல் விமர்சகரும் நடிகரும் எழுத்தாளருமான  நடிகர் சோ கதை வசனம் எழுதிய பழைய திரைப்படமொன்றில் வரும் வசனமாகும். இந்த வசனம் பிரபல்யமானது. ஊவா மாகாண சபை தேர்தலில் அரசியல் பகையாளிகள் இருவர் கூட்டுச் சேர்ந்திருப்பதைப் பார்க்கும் போது அந்த வசனம்தான் ஞாபகத்துக்கு வந்தது.
ஆம். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் கூட்டுச் சேரந்து இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவதைத்தான் இங்கு குறிப்பிடுகிறோம்.

Sunday, September 7, 2014

ஆடைத் தொழிற்சாலை யுவதி சமிலா திசாநாயக்காவை வல்லுறவு புரிந்து கொலை செய்த வைத்தியருக்கு மரண தண்டணை (கட்டுரை) - எம்.இஸட்.ஷாஜஹான்

        (இக் கட்டுரை 7-9-2014  அன்றைய வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வந்த கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த ஆடைத் தொழிற்சாலையொன்றில்  பணியாற்றிய இளம் யுவதி ஒருவர் வைத்தியசாலையில் வைத்து வைத்தியர் ஒருவரினால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பின்னர் வைத்தியசாலை கட்டிடத்தின் ஆறாவது மாடியிலிருந்து கீழே தள்ளப்பட்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டமை  பலருக்கும் அன்று அதிர்ச்சி அளித்த விடயமாக இருந்தது.
கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் (12-11-2007அன்று) நடைபெற்று இக்கொடூரச் சம்பவத்திற்கான தீர்ப்பு கடந்து புதன்கிழமை (3-9-2014) நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.

Wednesday, August 27, 2014

சிறுபான்மை மக்களை அடக்கி பெரும்பான்மையின மக்களை நம்பி தேர்தலில் குதிக்கத் தயாராகும் அரசு! - தேச நேசன்

 (24-8-2014 தமிழ்த் தந்தி பத்திரிகை)

படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அமைந்துள்ள 400 வருடம் பழமை வாய்ந்த திருகோணமலை வெள்ளை மணல் கருமலையூற்று பள்ளிவாசல்  இனந்தெரியாதோரால் அடித்து நொறுக்கி இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
 பிரதேசத்தில்  கடும் மழை பெய்து கொண்டிருக்கையில்  அந்த  நேரத்தைப் பயன்படுத்தி கனரக இயந்திரத்தைக் கொண்டு பள்ளிவாசல் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அந்த பள்ளி நிர்வாகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.