Thursday, September 11, 2014

அதிர்ச்சி வைத்தியம் அரசுக்கா? முஸ்லிம் காங்கிரஸிற்கா? - தேச நேசன்

 (தமிழ்த் தந்தி பத்திரிகை 7-9-2014)
ஊவா தேர்தலில் அரசாங்கத்துக்கு நாம் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும். அரசாங்கம் முஸ்லிம்களை கண்டுகொள்ளவில்லை என்பதை அரசு சார்பில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரையேனும் களமிறக்கப்படாததை வெளிக்காட்டியுள்ளது. இதனை மறைக்கவே தற்போது எமது கூட்டமைப்பு அவர்களின் கடிவாளம் கைக்கூலிகள் என கூறி வருகின்றனர். இவையெல்லாம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. ஊவா முஸ்லிம்கள் நன்றாக சிந்தித்து செயல்பட வேண்டும் அரசாங்கம் சார்பில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளர்களும் களமிறக்கப்படாமையானது ஊவா வாழ் முஸ்லிம்களை புறந்தள்ளியிருப்பதை தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. எனவே நடைபெறவுள்ள ஊவா மாகாண சபை தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என்று  பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

வாக்கு வேட்டைக்காக கூட்டு சேர்ந்திருக்கும் முஸ்லிம் கட்சிகள் - தேச நேசன்

(தமிழ்த் தந்தி பத்திரிகை 31-8-2014)

தமிழ் திரைப்படமொன்றில் நகைச்சுவை நடிகர் ஒருவர் 'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' என்று கிண்டலாகக் குறிப்பிடுவார். அதேபோன்று 'அரசியல்  என்பது ஒரு சாக்கடை. அதில் எதுவேண்டுமானாலும் கலக்கலாம்.' இது புpரபல அரசியல் விமர்சகரும் நடிகரும் எழுத்தாளருமான  நடிகர் சோ கதை வசனம் எழுதிய பழைய திரைப்படமொன்றில் வரும் வசனமாகும். இந்த வசனம் பிரபல்யமானது. ஊவா மாகாண சபை தேர்தலில் அரசியல் பகையாளிகள் இருவர் கூட்டுச் சேர்ந்திருப்பதைப் பார்க்கும் போது அந்த வசனம்தான் ஞாபகத்துக்கு வந்தது.
ஆம். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் கூட்டுச் சேரந்து இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவதைத்தான் இங்கு குறிப்பிடுகிறோம்.

Sunday, September 7, 2014

ஆடைத் தொழிற்சாலை யுவதி சமிலா திசாநாயக்காவை வல்லுறவு புரிந்து கொலை செய்த வைத்தியருக்கு மரண தண்டணை (கட்டுரை) - எம்.இஸட்.ஷாஜஹான்

        (இக் கட்டுரை 7-9-2014  அன்றைய வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வந்த கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த ஆடைத் தொழிற்சாலையொன்றில்  பணியாற்றிய இளம் யுவதி ஒருவர் வைத்தியசாலையில் வைத்து வைத்தியர் ஒருவரினால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பின்னர் வைத்தியசாலை கட்டிடத்தின் ஆறாவது மாடியிலிருந்து கீழே தள்ளப்பட்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டமை  பலருக்கும் அன்று அதிர்ச்சி அளித்த விடயமாக இருந்தது.
கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் (12-11-2007அன்று) நடைபெற்று இக்கொடூரச் சம்பவத்திற்கான தீர்ப்பு கடந்து புதன்கிழமை (3-9-2014) நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.

Wednesday, August 27, 2014

சிறுபான்மை மக்களை அடக்கி பெரும்பான்மையின மக்களை நம்பி தேர்தலில் குதிக்கத் தயாராகும் அரசு! - தேச நேசன்

 (24-8-2014 தமிழ்த் தந்தி பத்திரிகை)

படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அமைந்துள்ள 400 வருடம் பழமை வாய்ந்த திருகோணமலை வெள்ளை மணல் கருமலையூற்று பள்ளிவாசல்  இனந்தெரியாதோரால் அடித்து நொறுக்கி இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
 பிரதேசத்தில்  கடும் மழை பெய்து கொண்டிருக்கையில்  அந்த  நேரத்தைப் பயன்படுத்தி கனரக இயந்திரத்தைக் கொண்டு பள்ளிவாசல் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அந்த பள்ளி நிர்வாகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார சுமையில் வாழும் அரச ஊழியர்கள் - தேச நேசன்

(இக்கட்டுரை  17-8-2014 அன்றைய தமிழ்த் தந்தி’  வாரப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கமாறும் கோரி  கடந்த செவ்வாய்க்கிழமை (12-8-2014)  கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக  உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு  ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி ஒன்றை  நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், தாய்மார்கள் , பல்கலைக்கழக மாணவிகள்  உட்பட பலர் கலந்து கொண்டனர். அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதி நாடகம் ஒன்றையும் நடத்தினர்.

Saturday, August 16, 2014

இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பப்படும் வெளிநாட்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் - தேச நேசன்

(இக்கட்டுரை 10-8-2014 அன்றைய தமிழ்த் தந்திபத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)

படகுகள் மூலமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்லும்  இலங்கையைச் சேர்ந்த அகதிகள்;   அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்டுவது பற்றி அடிக்கடி ஊடகங்கள் ஊடாக அறிந்து கொள்கிறோம்.
கடந்த வாரம் முதல் அது போன்ற நடவடிக்கை  இலங்கையிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆம்! இலங்கையில் தங்கியிருந்தபடி ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு புகலிடம்  கோரிய பாகிஸ்தானியர்கள் சிலர்  கடந்த வெள்ளிக்கிழமை (1-8-2014) குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளால் தமது தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

Wednesday, August 6, 2014

மக்களை பொருளாதார சுமைகளிலிருந்து காப்பாற்றப்போவது யார்? - தேச நேசன்

(இக்கட்டுரை  3-8-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’  வாரப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

வாழ்க்கைச் செலவு வானுயர உயர்ந்து நின்று  சாதனைப் படைத்துக் கொண்டிருக்கிறது. மக்கள் சோதனைக்கு மேல் சோதனைகளை கண்டபடி வேதனையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அரசாங்கம் அடுத்த தேர்தல்களிலும் எப்படியாவது வெற்றிப்பெற வேண்டும் என்று திட்டங்கள் வகுத்து அதனை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், வாக்காளப் பெருமக்களான பொது மக்கள் படுகின்ற  பொருளாதார அவஸ்தைகளை, இன்னல்களை சிந்திப்பதற்கு அதனைப் பற்றிப் பேசுவதற்கு வெகு சிலரே உள்ளனர். தற்போது நடக்கப்போகும் தேர்தலைப் பற்றி கட்சிகள் சிந்திக்கும் காலமாகும்.

Monday, July 28, 2014

புனித நோன்பின் போதனைகளை தொடர்ந்து பின்பற்றுவோம் - எம். இஸட். ஷாஜஹான்

(இக்கட்டுரை (28-7-2014) அன்றைய வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

புண்ணியம் பொழிந்த கண்ணியமிகு மாதம் மாதம் எம்மை விட்டு பிரிந்து விட்டது. ரமழான் மாதம் முழுதும் நோன்பு நோற்கும் பாக்கியம் கிடைத்த எமக்கு  அல்லாஹ்வின் அருளினால்; நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.
இறை பள்ளிவாசல்களில் தக்பீர் முழக்கம் ஒலிக்கிறது. ஆம்! இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை 'ரமழானில்' நோற்று விட்டு 'ஷவ்வால்' மாத தலைப்பிறையைக் கண்டு இன்று (நாளை) நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.

பூஸா முகாமில் வாடும் புகலிடக் கோரிக்கையாளர்கள் - தேச நேசன்

(இக்கட்டுரை  20-7-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’  வாரப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
இலங்கையைச் சேர்ந்த அகதிகள் சட்ட விரோதமான முறையில் படகுகள் மூலமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்வது பற்றி நாங்கள் அறிந்துள்ளோம். இவர்கள் பயணிக்கும் படகுகள் நடுக்கடலில் கவிழ்ந்து அல்லது பழுதடைந்து  பலர் பரிதாபகரமாக உயிரிழப்பதையும் ஊடகங்களில் செய்திகளாக  பார்க்கிறோம். பலர் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
 கடந்த பல மாத காலமாக  அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி செல்வது குறைந்திருந்த நிலையில் கடந்த ஜுன் மாத இறுதியிலும் ஜுலை மாத ஆரம்பத்திலும் இரண்டு படகுகளில்  பெரும் எண்ணிக்கையான புகலிடக் கோரிக்கையாளர்கள் கிறிஸ்மஸ் தீவை அண்மித்தனர். இதில் ஒரு படகில் அதில் 37 சிங்களவர்களும்

முஸ்லிம் வாக்காளர்கள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும் - தேச நேசன்

(இக்கட்டுரை  27-7-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’  வாரப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

மாகாணசபை முறைமையை ஒழித்து அந்த அதிகாரங்களையும் தங்கள் கைக்குள் எடுத்துக்கொள்ள நினைக்கும் அரசுடன் ஒட்டிக்கொண்டு முஸ்லிம்கள் அரசியல் செய்வது முறையற்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை நேரடியாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.  முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி முன்பாகவே இந்தக் கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.
அதேபோன்று, பொது பலசேனா உட்பட பேரினவாத அமைப்புக்கள்,; மற்றும் பிரதான எதிர் கட்சிகளைச் சேரந்தவர்கள் உட்பட பல்வேறு அரசியல்வாதிகளும் முஸ்லிம் காங்கிரஸையும் அந்த கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமையும் தொடர்ந்து  விமர்சித்து வருகின்றனர்.

ஹக்கீமின் அரசியல் சாணக்கியம் என்பது அரசியல் அடைக்கலமா? - தேச நேசன்

(இக்கட்டுரை  13-7-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’  வாரப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

'இன வன்முறையில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்தினால் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதற்கான எந்த சமிக்ஞைகளையும் நான் சற்றும் காணவில்லை. அவர்களை தொடுவதற்கே இவர்கள் அச்சப்படுகிறார்கள். அவர்களை சீண்டினால் இன்னும் ஆபத்து ஏற்படும் என்ற நிலையில்தான் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் இருக்கிறார்கள். ஆனால், தராதரம் பார்க்காமல் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டில் நடைபெறுவது உண்மையான சட்ட ஆட்சி என்பதை நிலை நிறுத்த முடியும்.' இவ்வாறு கூறியிருப்பது யார் தெரியுமா? ஏதிர்கட்சி  தலைவர்களில் ஒருவரோ அல்லது ஏதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரோ அல்ல.

கலவரங்களின் விசாரணை நீதியாக இடம்பெற வேண்டும் - தேச நேசன்

 (இக்கட்டுரை  6-7-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’  வாரப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.) 

சிங்களத்தில் இவ்வாறு கூறுவார்கள். 'நடுத் ஆமுதுருவன்;கே. படுத் ஆமுதுருவன்;கே' 'வழக்கும் நீதிபதியுடையது. பொருட்களும் நீதிபதியுடையது' என்பது அதன் அர்த்தமாகும்.  அளுத்கமை வன்முறைச் சம்பவத்தை  பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் விசாரிப்பது அது போன்றதுதான்.
ஆம், கடந்த ஜுன் மாதம் 15 ஆம் திகதி அளுத்கம, பேருவளை, தர்கா நகர், வெலிப்பிட்டிய பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸாரும்

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது எப்போது? - தேச நேசன்

(இக்கட்டுரை  29-6-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’  வாரப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கத்தின் மீது  மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டிருக்கும் வேளையில், முஸ்லிம் மக்களுக்கு எதிராக அளுத்கம, தர்கா நகர் மற்றும் பேருவளை ஆகிய பகுதிகளில் வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டு அநீதி  இழைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வாழும் சிறுபான்மை மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்தவர்களாக காணப்படுகின்றனர். தமிழ் மக்களுக்கு 1983 ஜுலை மாதத்தில்  இடம் பெற்ற வன்செயல்கள் மூலமாக  ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி காலத்தில் அநீதி இழைக்கப்பட்டதைப் போன்று, முஸ்லிம்

Friday, June 27, 2014

இலங்கை முஸ்லிம்களுக்கோர் கறுப்பு ஜுன் - தேச நேசன்

(இக்கட்டுரை 22-6-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
எமது தேசம் மீண்டும் ஒரு முறை  செந்நீரால்  குளித்துக் கொண்டது. தமிழ் மக்களுக்கு 'கறுப்பு ஜுலை' (1983) போன்று  முஸ்லிம் மக்களுக்கு 'கறுப்பு ஜுன' வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.
ஆம்! கடந்த ஞாயிற்றுக்கிழமை  முதல் மூன்று தினங்களுக்கு மேலாக அளுத்கம, பேருவளை, களுத்துறை ஆகிய பிரதேசங்களில் நடாத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான  இன வன்முறைகளினூடாக  எமது நாடு சர்வதேச ரீதியில் மீண்டும்  ஒரு தடைவை அபகீர்த்தியை தேடிக் கொண்டுள்ளது.

Thursday, June 26, 2014

ஒத்துழைப்பு வழங்குமா இல்லையா? சர்வதேச அழுத்தங்களின் மத்தியில் இலங்கை எடுக்கப்போகும் முடிவு என்ன? - தேச நேசன்

 (இக்கட்டுரை 15-6-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

      இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும்  மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை விசாரணைக்குழுவை நியமித்துள்ளமையைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அரச தரப்பிலிருந்து வழமை போன்று எதிர்ப்பான கருத்துக்கள் வெளியிடப்படுகின்ற போதிலும் சர்வதேச நாடுகள் சிலவும் மற்றும் எதிர்கட்சிகளும்; சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கூறிவருகின்றன.

மூழ்கப் போகும் கப்பலில் இருந்து பாயத் தயாராகும் எலிகள்! தேச நேசன்

(இக்கட்டுரை 8-6-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

நவம்பர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்டுகிறது. ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதத்தில் இடம்பெறாவிட்டால் 2015 ஆம் வருட ஆரம்பப் பகுதியிலாவது அந்த தேர்தல் இடம்பெறும்;.
ஆரம்பத்தில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும, தற்போது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறலாம் என தெரிய வருகிறது.
இந்நிலையில், இந்தியாவைப் போன்று இலங்கையிலும் ஆட்சி மாற்றம் இடம்பெறும் என்று ஆருடம் கூறப்படுகிறது. இது தொடர்பாக தற்போது பரவலாகப் பேசப்படுகிறது.

Wednesday, June 4, 2014

முஸ்லிம்களின் பெருக்கத்தால் அச்சப்படும் பேரினவாதம் - தேச நேசன்

(இக்கட்டுரை 1-6-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

முஸ்லிம் மக்கள் தொடர்பில் அதிக காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும் கொண்ட அமைப்பாக பொதுபல சேனா அமைப்பு இருந்து வருவது யாவரும் அறிந்த பகிரங்கமான உண்மையாகும்.
அந்த அமைப்பு காலத்திற்குக் காலம் முஸ்லிம் இனத்திற்கும் இஸ்லாமிய சமயத்திற்கும் எதிரான கருத்துக்களை தெரிவித்து வருவதுடன் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு சண்டித்தனத்தையும் செய்து வருகிறது.
முஸ்லிமகளுக்கு  எதிராக பொதுபல சேனா அமைப்பு மேற்கொண்டு வரும் அநீதிகள், அடாவடித்தனங்கள் யாவும் தி;ட்டமிடப்பட்ட

ஆளும் கூட்டணிக்குள் ஆதரவு குறைந்து வரும் அரசாங்கம் - தேசநேசன்

(இக்கட்டுரை 11-5-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.) 
எமது நாட்டு அரசியல் நிலைவரம் அண்மைக்காலமாக ஆங்கிலத் திரைப்படம் போன்று ; விறுவிறுப்பாக  ஓடிக்கொண்டிருக்கிறது. எந்த வேளை எது நடைபெறுமோ? என்று மக்கள் ஊடகங்களின் ஊடாக செய்திகளை அறிவதில் அதிகம் நாட்டம் கொண்டவர்களாக இருப்பதை அவதானிக்க முடிகிறது.
இரவு வேளையில், தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும் செய்தி அறிக்கைகளை தொலைக்காட்சி தொடர் நாடகம் ஒன்றை பார்ப்பது போன்று மக்கள் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். அதற்கு ஏற்ற வகையில் அந்த தொலைக்காட்சி அலைவரிசைகளும்

Thursday, May 8, 2014

அரசியலில் கசினோ விளையாடு;ம் முஸ்லிம் தலைமைத்துவங்கள் - எம்.இஸட்.ஷாஜஹான்

 (இக் கட்டுரை 8-5-2014  அன்று வீரகேசரி பத்திரிகையில் பிரசுமாகியுள்ளது.)
  
 எமது முஸ்லிம் தலைமைத்துவங்களில் பலர் தமது முதுகெலும்பற்ற தன்மையையும் சுயநல அரசியல் செயற்பாடுகளையும் அடிக்கடி வெளிப்படுத்தி வந்துள்ளனர்.
அதுபோன்ற வெளிப்படுத்தல்கள் தொடர்ந்து இடம்பெறும் கால கட்டமாக தற்போதைய நாட்டு சூழ்நிலையும் அரசியல் சூழ்நிலையும்  அமைந்து உள்ளன.
கசினோ சூதாட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மூன்று திட்டங்களாக அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்களின கீழான கட்டளை ஆளும் தரப்பு  முஸ்லிம்  தலைமைத்துவங்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது.

Friday, May 2, 2014

நாட்டை உலுக்கி வரும் முகமூடி குழுக்களின் கொள்ளைகள் - கலாநெஞ்சன்

  (இக்கட்டுரை 27-4-2014 அன்றைய தமிழ்த் தந்தி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)

எமது நாட்டை தற்போது இரண்டு வகையான குழவினர் உலுக்கி வருகின்றனர். அவர்களின்  சட்டவிரோத செயற்பாடுகள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை தருபவைகளாக உள்ளன.  ஒரு குழுவினர் காவி உடை தரித்த பேரினவாதிகள். மற்றைய குழவினர் ஆயுதம் ஏந்திய  முகமூடி கொள்ளையர்கள்.
ஒரு குழவினர் சிறுபான்மை மக்களின் உரிமைகளை கொள்ளையடிக்கின்றனர். மற்றைய குழுவினர் நிதி நிறுவனங்களிலும்;, நகைக் கடைகளிலும் பணத்தையும் நகைகளையும்

Tuesday, April 22, 2014

நீர்கொழும்பை அதிர்ச்சியடையச் செய்துள்ள முகமூடி நபர்களின் தொடர் கொள்ளை - எம்.இஸட்.ஷாஜஹான்

 (இக்கட்டுரை (22-4-2014) அன்றைய வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

நீர்கொழும்பு நகரம் பல்வேறு விடயங்களுக்கு பிரபல்யம் பெற்றதாகும். மீன் பிடித்துறை. உல்லாசப் பயணத்துறை, வர்த்தகத்துறை என பொருளாதார ரீதியிலும். அழகிய கடற்கரைகள்;,  கடோலான தாவரங்;கள் மற்றும் களப்பு   என இயற்கை வனப்பு ரீதியிலும் நீர்கொழும்பு மாநகரம் பிரபல்யம் பெற்றது.
அதுமட்டுமன்றி கட்டு நாயக்க சர்வதேச விமான நிலையம். சுதந்திர வர்த்தக வலயம் என்பனவும் நகரை அண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ளன.

Monday, April 21, 2014

பேரினவாதிகளுக்கு தூக்குக் கயிறாக அமையும் ஒற்றுமைக் கயிறு - கலாநெஞ்சன்

 (இக்கட்டுரை 20-4-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
   அரசியல்வாதிகள் சண்டித்தனம் செய்வது எமது நாட்டில் புதிதல்ல. மக்கள் பிரதிநிதிகள்; வன்முறைச் சம்பவங்களிலும் சட்டத்தை கையில் எடுத்து தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி இடம்பெறும் விடயமாகும். ஊடகங்களும் அவற்றை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும். வன்முறைகளுக்கே பெயர்போன அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். நாடாளுமன்றம் முதல் உள்ளுராட்சி சபை வரை அதுபோன்ற அரசியல்வாதிகள் நம்மிடம்  நிறைய பேர் உள்ளனர்.
இதுபோன்ற அரசியல்வாதிகளின் சண்டித்தனமான செயல்களை காவி

Wednesday, April 16, 2014

'இலங்கையை மியன்மாராக மாற்ற முயலும் பொது பல சேனா'

 -     எம்.இஸட்.ஷாஜஹான்
 (இக்கட்டுரை 17-4-2014 இன்றைய விடிவெள்ளி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

மாகாண சபை தேர்தல் முடிந்த கையோடு மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏந்தியிருக்கிறது. ஆம். பொதுபலசேனா மீண்டும் தனது சண்டித்தனத்தை ஆரம்பித்திருக்கிறது.
1990 இல் மன்னார் மாவட்டத்தில் இருந்து  வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை பொதுபல சேனா அமைப்பு வன்மையாக எதிர்த்துள்ளது. மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலக பிரிவிலுள்ள மறிச்சுக்கட்டி கிராமத்துக்கு வந்த பொதுபலசேன அமைப்பினர் அக்கிராம மக்களை நோக்கி தகாத வார்த்தைகள் பேசி அட்டகாசம் புரிந்துள்ளனர்.

Sunday, April 13, 2014

எதிர் கட்சிகள் பொது அணியில் திரண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா? முன்னோடிப் பரீட்சையில் குறைவான புள்ளிகளைப் பெற்றுள்ள அரசு - கலாநெஞ்சன்


(இக்கட்டுரை 13-4-2014 இன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)


மாணவர்கள் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை போன்ற பொதுப் பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு முன்னர் பாடசாலைகளில் முன்னோடிப் பரீட்சைகளை நடத்தப்பட்டு மாணவர்களின் அடைவு மட்டம்  இனங்காணப்படும்.

இந்;த முன்னோடிப் பரீட்சைகள் மூலமாக மாணவர்களும் தமது கல்வி நிலையை அறிந்து கொண்டு பரீட்சைக்கு மேலும் சிறப்பான முறையில் தயாராவர்;. அந்;த முன்னோடிப் பரீட்சைகளின் பெறுபேறுகளே மாணவர்கள் தோற்றும் அந்தப் பொதுப் பரீட்சையின் பெறுபேறாகவும் பெரும்பாலும்

Wednesday, April 2, 2014

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் ஒரு அலசல் - எம்.இஸட்.ஷாஜஹான்


(இக்கட்டுரை (2-4-2014) இன்றைய வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

  கடந்த  சனிக்கிழமை (29-3-2014) நடைபெற்ற மேல் மற்றும் தென் மாகாண மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.

தேர்தல் முடிவுகள் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளன. அந்த முடிவுகள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும்  பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எச்சரிக்கை பலவற்றை விடுப்பதாக அமைந்துள்ளன.
அதேவேளை, மாற்றுத் தீர்வாக  அல்லது தெரிவாக சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சியையும், மக்கள் விடுதலை முன்னணியையம் மக்கள் கருத ஆரம்பித்துள்ளாரகள் என்பதை முடிவுகள்

Saturday, March 15, 2014

மேல் மாகாண சபை தேர்தலும் சிறுபான்மை பிரதிநிதித்துவமும் - - எம்.இஸட். ஷாஜஹான்

(இக்கட்டுரை 16-3-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)

எதிர்வரும் மாகாண சபை தேர்தல் சிறுபான்மை  மக்களுக்கு முக்கிய தேர்தலாக உள்ளது. குறிப்பாக மேல் மாகாண சபை தேர்தல்  தமிழ் முஸ்லிம் மக்களுக்கு  முக்கியமானதொரு தேர்தலாக அமைந்துள்ளது.
இது என்ன மாகாண சபை தேர்தல்தானே. பாராளுமன்ற தேர்தல் அல்லவே என சிறுபான்மை  மக்கள் கருதுவார்களாயின் அல்லது யார் ஆட்சி அமைத்தால் நமக்கென்ன என்று தேர்தலில் வாக்களிக்காமல் விடுவார்களாயின், அது சிறுபான்மை மக்களை பாதிக்கும் என்பது

Thursday, March 13, 2014

அரசில் இருந்து விலகுமா முஸ்லிம் காங்கிரஸ்? -எம்.இஸட்.ஷாஜஹான்

(9-3-2014 அன்றைய 'தமிழ்த் தந்திபத்திரிகையில் பிசுரமானது)

 முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான அறிக்கை ஒன்றினை ஜெனீவா மனித உரிமை ஆணைக் குழுவிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  கொடுத்துள்ள விடயம்  தொடர்பாக கடந்த வாரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முஸ்லிம் காங்கிரஸ்  தலைவரும் அமைச்சருமான ரஹுப் ஹக்கீமுடன் கடும் தொனியில் கதைத்ததாக செய்திகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
'உங்களால் ஆளும் கட்சியில் இருக்க முடியும் என்றால் இருங்கள் . இல்லையேல் விலகிச் செல்லுங்கள்என்று ஜனாதிபதி ரஹுப்

Saturday, March 1, 2014

தேர்தலுக்கு சவாலாக அமையும் வன்முறைகள் - எம்.இஸட்.ஷாஜஹான்

(2-3-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிசுரமானது)
மேல்  மற்றும் தென் மாகாண சபை தேர்தல்  பிரசார நடவடிக்கைகள் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை வரை (24-2-2014) தேர்தல் சட்ட மீறல் மற்றும் தேர்தல் வன்முறைகள் குறித்து 354 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென கபே இயக்கம் தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்ட விதிகள் மீறப்பட்டமை குறித்து 338 முறைப்பாடுகளும் தேர்தல் வன்முறைகள் குறித்து 16 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதென  தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே இயக்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, February 21, 2014

மேல் மாகாண சபை தேர்தலும் சிறுபான்மை கட்சிகளும் - எம்.இஸட்.ஷாஜஹான்


('தமிழ்த் தந்தி' பத்திரிகையில் 16-2-2014 அன்று பிரசுரமானது)

எதிர்வரும் மார்ச்  மாதம் நடைறெவுள்ள மேல் மாகாண சபை தேர்தல்  சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சிறுபான்மை கட்சிகளுக்கும் முக்கியமான தேர்தலாக உள்ளது.
இரு பிரதான கட்சிகள் உட்பட பல கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை  குறிவைத்து வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன. அத்துடன் சிறுபான்மை மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் திட்டத்தையும் அமுல்படுத்தியுள்ளன.
 இம்முறை அதிக எண்ணிக்கையான முஸ்லிம் வேட்பாளர்கள்  களமிறங்கியுள்ளனர். சுயேட்சைக் குழுக்களிலும் முஸ்லிம்> தமிழ்

Friday, February 14, 2014

இனவாதிகள் - அரசாங்கம் - முஸ்லிம் தலைமைத்துவங்கள் - கலாநெஞ்சன்


('தமிழ்த் தந்தி' பத்திரிகையில் 2-2-2014 அன்று பிரசுரமானது)

இலங்கையை முஸ்லிம் காலணித்துவமாக்கும் சதித்திட்டத்தை முறியடிக்கும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசிறி தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வை.எம்.எம்.ஏ.அமைப்பு, உலமா சபை, முஸ்லிம் அமைப்புகள் தொடர்பாக பாரிய சந்தேகங்கள இருப்பதாகவும், கிழக்கில் சூ10ட்சுமமான முறையில் முஸ்லிம் அடிப்படைவாத சக்திகள் இயங்கி கொண்டிருப்பதோடு அதன் பின்னணியில் சர்வதேச முஸ்லிம் அடிப்படைவாதச் சக்திகள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்